எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறது பாஜக: ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சோரன், பணபலம் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உங்கள் திட்டம், உங்கள் அரசு, உங்கள் இல்லத்திற்கு என்ற நிகழ்ச்சியில் ரூ. 555.83 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (செப். 10) அடிக்கல் நாட்டினார். ரூ. 472 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

பணபலம் கொண்டு அவர்கள் (பாஜக) ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். தற்போது அதைக்கொண்டு எங்கள் ஆட்சியை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம்.

எங்கள் நலத்திட்டங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூத்தக் குடிமக்கள் ஓய்வூதியம் வாங்குவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. வளமாக இருக்கும் விவசாயிகள், கல்வி கற்கும் பெண்கள் என மாநிலத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியவில்லை.

இந்த மண்ணின் கனிம வளங்களால் ஜார்க்கண்ட் மாநிலமானது தங்கப் பறவை என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் மக்கள் பின்தங்கியுள்ளனர். மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அதனை செல்வந்தர்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே கொடுக்கின்றனர்.

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: பிரசாரத்துக்காக சிறையிலிருந்து வரும் எம்.பி.

கனிம வளங்கள் நிறைந்த மண்ணை விற்று முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்ததாக என் மீது குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்கள். அதன் மூலம் என்னை அச்சுறுத்தப்பார்த்தார்கள். எங்கள் ஆட்சியையும், திட்டங்களையும் கண்டு அவர்கள் (பாஜக) அஞ்சுவதையே இது காட்டுகின்றன.

கிராமங்களை வளமானதாக்குவோம். கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் ஜார்க்கண்ட் வளர்ச்சி சாத்தியமில்லை என சோரன் பேசினார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!