எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

நாகை,

நாகை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் 11 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் நெடுந்தீவு அருகே நள்ளிரவு இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவா்கள் 11 பேரையும் பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்தனா். விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.

இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, நாகை மீனவா்களை கைது செய்ததாக, அந்நாட்டு கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவா்கள் 11 பேரும் காங்கேசன்துறைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவா் என தெரிகிறது. இந்த நடைமுறைகளுக்கு பிறகே கைது செய்யப்பட்ட மீனவா்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு