பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான எஸ்றா சற்குணம், உடல்நலக்குறைவால் கடந்த 22-ந் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது அவரின் தொலைபேசி வாயிலாக சற்குணத்தின் மகளிடம் விஜய் ஆறுதல் கூறினார்.