ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு – மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்