ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் மந்தர் ராவ்

மந்தர் ராவ் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியில் கோவாவைச் சேர்ந்த மந்தர் ராவ் தேசாய் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

32 வயது பின்கள வீரரான மந்தர் ராவ் 2024-25-ம் ஆண்டு சென்னையின் எப்.சி.யில் இணையும் 7-வது வீரர் ஆவார். அவர் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.

155 ஐ.எஸ்.எல். ஆட்டங்களில் ஆடிய அனுபவசாலியான மந்தர்ராவ், 2021-ம் ஆண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா