ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு… அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பித்தாக கூறப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த கிரெக் பார்கிளேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஐ.சி.சி. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Jay Shah has been elected unopposed as the next Independent Chair of the ICC.https://t.co/Len6DO9xlE

— ICC (@ICC) August 27, 2024

இதன் மூலம் இளம் வயதில் ஐ.சி.சி.-ன் தலைவரானவர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா