வரியின் மூலம் கிடைத்த ரூ.1.78 லட்சம் கோடி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு இன்று (அக். 10) ஒதுக்கீடு செய்தது.
வழக்கமான தவணையுடன் கூடுதலாக அக்டோபர் மாத தவணைத் தொகையான ரூ. 89,086.50 கோடியையும் சேர்த்து மத்திய அரசு விடுவிதது.
அடுத்தடுத்து வரக்கூடிய பண்டிகை நாள்களையொட்டி முன்கூட்டியே விடுவிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 31,962 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கியதை விட இது நான்கரை மடங்கு அதிகமாகும்.
வரிப்பகிர்வு தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடக்கம்..
இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?
மாநிலவாரியாக…
ஆந்திரப் பிரதேசம் ரூ. 7,211 கோடி
அருணாச்சலப் பிரதேசம் ரூ. 3,131 கோடி
அஸ்ஸாம் ரூ. 5,573 கோடி
பிகார் ரூ. 17,921 கோடி
சத்தீஸ்கர் ரூ. 6,070
கோவா ரூ. 688
குஜராத் ரூ. 6,197
ஹரியாணா ரூ. 1,947
ஹிமாசலப் பிரதேசம் ரூ. 1,479
ஜார்க்கண்ட் ரூ. 5,892
கர்நாடகம் ரூ. 6,498
கேரளம் ரூ. 3,430
மத்தியப் பிரதேசம் ரூ. 13,987
மகாராஷ்டிரம் ரூ. 11,255
மணிப்பூர் ரூ. 1,276
மேகாலயா ரூ. 1,367
மிசோரம் ரூ. 891
நாகாலாந்து ரூ. 1,014
தமிழ்நாடு ரூ. 7,268
தெலங்கனா ரூ. 3,745
மேற்கு வங்கம் ரூ. 13,404
இதையும் படிக்க | மும்பை 26/11 தாக்குதல்.. 3 நாள்களாக தாஜ் ஓட்டல் வாசலிலேயே நின்றிருந்த ரத்தன் டாடா