ஒருநாள் தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்த விராட் – ரோகித்

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் இன்று இலங்கை சென்றடைந்துள்ளனர்.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோரும் இலங்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருநாள் தொடருக்கான அட்டவணை விவரம்:

முதல் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 02

2வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 04

3வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 07

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி