ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்து இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாபடம் | பிசிசிஐ (எக்ஸ்)

ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்து இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த வரிசையில், 7805 ரன்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். இந்திய மகளிரணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கௌரும் ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்துள்ளார்.

இன்றையப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Value of gold bar hits $1 million for the first time ever

Excise Policy case: Delhi HC dismisses Arvind Kejriwal’s plea challenging his arrest by CBI

வயநாடு மக்களுக்கு ராகுல் உருக்கமான கடிதம்!