ஒரே மாதத்தில் 3-வது முறையாக ஆளுநர் டெல்லி பயணம்

ஒரே மாதத்தில் 3-வது முறையாக ஆளுநர் டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த மாதத்தில் 3-வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார்.

இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி ஆளுநர் டெல்லி சென்றார்.அங்கு 4 நாட்கள் தங்கியிருந்த அவர், 4-ம் தேதி சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி 2-வது முறையாக டெல்லி சென்ற ஆளுநர், 3 நாட்களுக்குப் பிறகு, 21-ம் தேதி சென்னை வந்தார்.

இந்நிலையில், 3-வது முறையாக நேற்று காலை 6.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். இன்று இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் சென்னை திரும்பவுள்ளார். பதவி நீட்டிப்புக்காக டெல்லி சென்று வருவதாகக் கூறப்படுகிறது.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?