ஓடும் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு – பயணிகள் அதிர்ச்சி

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டு உடைந்து விழுந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்லுப்பட்டி வழியாக ஒட்டன்சத்திரத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வழக்கம்போல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வேடசந்தூர் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்தபோது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டின் பக்கவாட்டு பகுதி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

உடனே பேருந்தில் இருந்த பயணிகள் மிகுந்த கவனத்துடன் இறங்கினர். இந்த சம்பவத்தால் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. படிக்கட்டில் இருந்து உடைந்த பாகங்களை டிரைவர், கண்டக்டர் சேகரித்துக்கொண்டு, பணிமனை நோக்கிச்சென்றனர்.

Related posts

Pune: ₹12.99 Lakh Seized in Hadapsar Ahead of Maharashtra Assembly Polls

Mumbai: 2 Passengers Arrested After DRI Intercepts Flight, Uncovers Smuggled Gold Weighing 9,487 gm Worth ₹7.69 Crores

Cyclone Dana: Indian Navy Prepares For Disaster Relief Along Odisha & Bengal Coast, NDRF Teams Deployed; VIDEO