ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி!

ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு விராட் கோலி தனது பேட்டை பரிசளித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஓய்வு பெறப்போகும் வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தன் கையொப்பமிட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு வெளியேறும் வரை வேறு எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என்று தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியிலும் விளையாடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி

இரண்டாவது டெஸ்ட்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றவுடன் ஷகிப் அல் ஹசன் அருகில் சென்ற விராட் கோலி அவரிடம் தனது பேட்டை பரிசாக வழங்கினார்.

விராட் கோலி பேட்டை பரிசாக வழங்கியவுடன் இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஷகிப் அல் ஹசன் இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். ஐபிஎல்லில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காகவும் 71 போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன், ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தற்போதைய வங்கதேசத்தில் இடைக்கால அரசும் ஷகிப் அல் ஹசனுக்கு பிரியாவிடை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கான்பூர் டெஸ்ட் போட்டி ஷகிப் அல் ஹசனுக்கு 71 ஆவது மற்றும் கடைசிப் போட்டியாக அமைந்து.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஷகிப் அல் ஹசன் முழுமையாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஷகிப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!