கடன் தொல்லையால் சிக்கி தவிக்கிறேன் – வீடியோ பதிவிட்டு வீட்டு புரோக்கர் தற்கொலை

கிரிஷ்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

கோவை,

கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (வயது 51). வீடு பார்த்துக்கொடுக்கும் புரோக்கர். இவருடைய மனைவி லூர்து மேரி. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து கிரிஷ்குமார் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு ரத்தினபுரியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கிரிஷ்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், 'என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல, கடன் தொல்லையால் சிக்கி தவிக்கிறேன்' என வீடியோ பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.

Related posts

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா

தமிழகத்தில் வழங்கப்பட்ட முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை கோரிக்கை