கணவராக 100க்கும் அதிகமான மதிப்பெண்கள் தரலாம்..! ஆர்த்தி ரவியின் வைரல் விடியோ !

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சில மாதங்களாக, ஜெயம் ரவியும் – ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது உறுதியானது.

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்..! பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!

தற்போது எக்ஸில் ஆர்த்தி ரவி, ஜெயம் ரவி பேசிய விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதில் ஆர்த்தி ரவி நேர்காணல் ஒன்றில், “ எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது என்னுடைய வாந்தியை அவர் கையில் பிடித்திருக்கிறார். இதுபோல பல முறை என்னை அன்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு இரவு 3 மணிக்கு இது வேண்டுமென்றால் உடனடியாக வந்து செய்துகொடுப்பார். அதை முடித்துவிட்டு எபோது தூங்குவார் தெரியவில்லை. பின்னர் படப்பிடிப்புக்கும் செல்லுவார். கணவராக அவருக்கு 100க்கும் அதிகமான மதிப்பெண்களை தருவேன். இதுமாதிரியான கணவர் அனைவருக்கும் அமைய வேண்டும்” எனக் கூறியிருப்பார்.

ஜூனியர் என்டிஆர் படத்தில் ஆலியா பட்?

ஜெயம் ரவி, “என்னுடைய மனைவி இல்லாவிட்டால் நான் இல்லை” எனக் கூறியிருப்பார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு கடினமான நேரம் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Hard time for Jayam Ravi Aarti and Jayam Ravi official divorced | #JayamRavi#AartiRavi#Divorcepic.twitter.com/KqhBlFHMwC

— (@Deepak32763716) September 9, 2024

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!