கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

ஆவடி அருகே கணவர் இறந்த 3 நாள்களில் துக்கம் தாங்காமல், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அருகே ஆரிக்கம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முரளி (32). தொழிலாளி. இவரது மனைவி நர்மதா (28). தம்பதிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு குழந்தை இல்லையாம். இந்த நிலையில் கடந்த 20}ஆம் தேதி குழந்தை இல்லாத விரக்தியில் முரளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

கணவர் இறந்த சோகத்தில் நர்மதா இருந்த நிலையில், திங்கள்கிழமை அவர் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்