கனடாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

அமெரிக்காவின் சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவில் இன்று(அக்.15) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

புது தில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘ஏர் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாலை 5.30 மணி நிலவரப்படி, இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது