கனமழை: கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

கோவை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது . மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

35 செ.மீ., கடந்தது! மழைப்பொழிவில் கடப்பாக்கம் புதிய சாதனை

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்