கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்மிகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் பிறந்த தினத்தை ஒட்டி நாளை (செவ்வாய் கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

20.08.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.09.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்