கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை… நடிகர் தர்ஷனின் ஒப்புதல்

ரசிகருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொன்றோம்… கன்னட நடிகர் தர்ஷன் ஒப்புதல் வாக்குமூலம்

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவரை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் நான்காயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்களின் பின்னணி என்ன?.

கன்னட திரையுலகை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த கர்நாடகாவையும் கதிகலங்க வைத்த இளைஞரின் கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தனது ரசிகர் ரேணுகாசாமியை, சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதில் அவருக்கும் தொடர்பு உள்ளது குற்றப்பத்திரிகையில் அம்பலமாகியுள்ளது. நடிகர் தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகாசாமி என்ற இளைஞர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அறிந்து ஆத்திரமடைந்த தர்ஷன், தனது ரசிகர் என்றும் பார்க்காமல் ரேணுகாசாமியை ஆள்வைத்து அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன், ரேணுகாசாமியை தாக்கியதை போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.

விளம்பரம்

இந்த வழக்கு தொடர்பாக, 3 ஆயிரத்து 991 பக்க குற்றப்பத்திரிகை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தர்ஷன் மற்றும் அவரது உதவியாளர்கள் ரேணுகாசாமியை எப்படி சித்ரவதை செய்து கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷன் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம், ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவுக்கு கடந்த ஜூன் 8-ம் தேதி அழைத்து வந்துள்ளார். அங்கு, ஒரு கொட்டகையில் அடைத்து வைத்து அவரை, தர்ஷனின் உதவியாளர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

விளம்பரம்

சம்பவத்து அன்று மாலையில் தர்ஷன் அங்கு வந்தபோது, ஏற்கனவே கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இருந்த போதும், தர்ஷன் அந்த இளைஞரின் மார்பு, கழுத்து மற்றும் தலையில் கையாலும், மரக்கட்டையாலும் அடித்து துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்போது உடன் இருந்த நடிகை பவித்ரா கவுடாவை, அவரின் காலணியை கழற்றி ரேணுகாசாமியை அடிக்க கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், கரண்ட் ஷாக் கொடுத்தும் அவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தர்ஷன் ஒப்புக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

ரேணுகாசாமியை கொலை செய்து, அதை மூடி மறைப்பதற்காக தர்ஷன், தனது உதவியாளர் பிரதோஷுக்கு 40 லட்சம் ரூபாய் கொடுத்ததும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் தான் கொலை செய்ய தூண்டியதாகவும், சதிக்கு உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Also Read |
புது ஃபெராரி காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ!

இந்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷனுக்கு, ராஜ உபசரிப்பு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெல்லாரி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

விளம்பரம்

ஆனால், அங்கும் தனக்கு டிவி வேண்டும், சொகுசான சேர் வேண்டும், கழிவறை வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.

தான் ஒரு கொலைக் குற்றவாளி என்பதை மறந்து, இன்னும் தான் கதாநாயகன்தான் என்ற நினைப்பில் நடிகர் தர்ஷன் சிறையில் நடந்துகொள்ளும் சம்பவத்திற்கு கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cinema
,
Crime News
,
Karnataka
,
Latest News
,
Murder

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!