கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை தகவல்

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு இதை தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும் வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி