களக்காடு அருகே கிராம சபைக் கூட்டம்

களக்காடு அருகே கிராம சபைக் கூட்டம்

களக்காடு, ஆக. 15: களக்காடு அருகே தோப்பூரில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோவிலம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் மு. லதா தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் கணேசன் வரவேற்றாா். திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள் கோவிலம்மாள்புரம் பா. சிதம்பரநாதன், காமனேரி மு. நியூஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் சவளைக்காரன்குளம் பேருந்துநிறுத்தம் அருகேயுள்ள ஆபத்தான குறுகிய பாலத்தை அகலப்படுத்துவது, அனைத்துக்

குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தடையின்றி விநியோகம் என்பன உள்ளிட்ட மக்களின் அடிப்படை

பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்