கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு – ஒருவர் கைது

கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக தொிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை அருந்தியதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் கிராமத்தில் சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சாிந்து விழுந்தனா். இவா்களையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

15-க்கும் மேற்பட்டோா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். மேலும் இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட கலெக்டா் ஷ்ரவன்குமாா், போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் காா்த்திகேயன், செந்தில்குமாா், மருத்துவக்கல்லூாி முதல்வா் நேரு, நகராட்சி தலைவா் சுப்புராயலு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் புவனேஷ்வாி பெருமாள் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவா்களை நோில் சந்தித்து நலம் விசாாித்தனா். மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உாிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டா்களுக்கு அறிவுறுத்தினா்.

கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிாிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிாிழந்த சம்பவம் கருணாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு