கள்ளிமந்தையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

கள்ளிமந்தையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், கள்ளிமந்தையம், சிக்கமநாயக்கன்பட்டி, பொருளூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், கள்ளிமந்தையம், சிக்கமநாயக்கன்பட்டி, பொருளூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெற்றது.

கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் செள.சரவணன் தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி, தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவி சத்திய புவனா, துணைத் தலைவா் பி.சி.தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி.ராஜாமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் 322 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் உடனடியாக 8 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதா, தாஹிரா, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரபாகரன், ஊராட்சிமன்றத் தலைவா்கள் கணேசன், குப்புச்சாமி, பரவேஸ்வரிசக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு