சென்னை,
5 நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இதன் பின்னர் அவர் இன்று தமிழகம் திரும்பினார்.
இந்த நிலையில், டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பாஜக தரப்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சந்திப்பு நடைபெறுகிறது.