‘கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்’ – டி.ராஜா

ராஞ்சி,

கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. அவர் ஒரு கவர்னர்தான், சர்வாதிகாரி அல்ல. இதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னால் எதுவும் செய்ய முடியும் என்றும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை ஜனாதிபதி கவனித்து, கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related posts

சமையல் எண்ணெய், முந்திரி, நெய், விலை அதிகரிப்பு எதிரொலி: தீபாவளி இனிப்பு பலகார வகைகள் கிலோவுக்கு ரூ.50 உயர்வு

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை தொடக்கம்: ஆன்லைனில் முன்பதிவு 

“திமுக மாநாட்டுக்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் மாநாட்டுக்கு ஏன்?” – சீமான் கேள்வி