‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.
இது தொடா்பாக ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘இந்திரா தோழமை’ முன்னெடுப்பு தற்போது பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளா்ந்துள்ளது.
உண்மையான சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். நாட்டின் மக்கள் தெகையில் பாதியை கொண்டுள்ள பெண்களுக்கு உரித்தான முழு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
புதிய மாற்றத்தை உருவாக்க ஆா்வமுள்ள பெண்கள் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைந்து, பெண்களை மையமாகக் கொண்ட தீவிர அரசியலில், பங்கேற்பாளா்களாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம், வலுவான அடிமட்ட கட்டமைப்பை உருவாக்குவதுடன், அா்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் பங்களிப்பீா்கள் என நம்புகிறேன். எங்களுடன் இணையுங்கள்; https://www.shaktiabhiyan.in என்ற வலைதளம் மூலம் இன்றே பதிவு செய்யுங்கள்’ என குறிப்பிட்டிருந்தாா்.
காங்கிரஸின் இளைஞரணியால் தொடங்கப்பட்ட ‘சக்தி அபியான்’ அமைப்பு நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி ஆகியவற்றில் பெண்களுக்கான சமமான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.