காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லவ்லீன்!

ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜா மற்றும் அவரது ஆதரவாளர்களும் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா காங்கிரஸில் இணைந்தனர்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5ல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்தக் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரோஹ்டக்கில் வேட்பாளராக இருந்தவர் துதேஜா, தேர்தலில் துதேஜாவை வேட்பாளராக அறிவிக்காமல் பைஜேந்திர ஹூடாவை ஆம் ஆத்மி களமிறக்கியது. ரோஹ்டக்கில் பஞ்சாபியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். துதேஜாவும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரை ஆம் ஆம்தி களமிறக்கவில்லை.

ராணுவ வீரர்களுடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பாஜகவை சாடிய ராகுல், பிரியங்கா!

குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை நிரம்பி வழிதல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் ஈடுபாட்டதாகவும், அதே பிரச்னைகளை காங்கிரஸும் எழுப்பி வருகின்றது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் காங்கிரஸில் இணைந்தேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்ய உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே எம்எல்ஏ பாரத் பூஷன் பத்ராவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன் என்றார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி