காஞ்சிபுரத்தில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் – கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

தி.மு.க. பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் வருகிற 28-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் வருகிற 28-ந்தேதி தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சிபுரத்தில் இந்த பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING || வரும் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
அனைத்து கட்சி தலைவர்களும் மேடையில் பங்கேற்றவாறு பொதுக்கூட்டத்தை நடத்த திட்டம்
நேற்று திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை… pic.twitter.com/saSe5ny6Z5

— Thanthi TV (@ThanthiTV) September 18, 2024

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்