காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிவாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஓசூர்,

திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் அருகே வேட்டவலம் பக்கமுள்ள கல்லாவி சுரத்தூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சிவாஜி (வயது 19). இவர் ஓசூர் செம்படதெருவில் பெற்றோருடன் தங்கி மிடிகிரிப்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சிவாஜி, செம்படதெருவில் அவர் தங்கி உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து சிவாஜியின் பெற்றோர் விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி