காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன்? இயக்குநர் விளக்கம்!

இயக்குநர் ஜியோ பேபி காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன் என விளக்கமளித்துள்ளார்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கினார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் இப்படம் உருவானது.

தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினரரும் சமூகத்தினரும் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருந்தது காதல் – தி கோர்.

இதையும் படிக்க:தேவரா 2ஆம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங்..! கொரடால சிவா விருப்பம்!

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜியோ பேபி பேசியதாவது:

நடிகர் மம்மூட்டி என்பதால் நெருக்கமான காட்சிகளை வைக்காமல் இல்லை. படத்தின் நோக்கமே நெருக்கமான காட்சிகள் இல்லாமலே இருவரின் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இரண்டு நபர்கள் காதலில் இருக்கும்போது நெருக்கமான காட்சிகள் வைக்க வேண்டுமென்ற அவசியம் இதில் தேவைப்படவில்லை.

மம்மூட்டி இல்லையென்றால் வேறொரு நடிகரை வைத்து எடுத்திருப்பேன். மம்மூட்டியை தேர்ந்தெடுக்க காரணம் எல்ஜிபிடிக்யூ மக்களின் மீதிருக்கும் பொதுப்படையான பார்வைகளை மாற்ற ஒரு சூப்பர் ஸ்டார் தேவைப்பட்டது. அதனால்தான் அவரை தேர்ந்தெடுத்தோம்.

இதையும் படிக்க: சித்தியாக மாறிய சமந்தா..! வைரல் விடியோ!

இந்தப் படத்தின் கதையை அதன் நோக்கத்தை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டு கண்ணூர் ஸ்குவாட் படத்தின் படப்பிடிப்பைக்கூட தள்ளிவைத்துவிட்டு மம்மூட்டி இதில் நடித்தார் என்றார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக