காலையில் திருமணம்.. மாலையில் மணப்பெண் கொலை..

காலையில் திருமணம்… மாலையில் மணப்பெண் கொலை… புது மண தம்பதிகளுக்குள் நடந்தது என்ன?

நவீன்குமார் – லிகிதா ஸ்ரீ தம்பதி

கர்நாடகாவில் திருமணம் முடித்த நான்கு மணி நேரத்தில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருந்த பகுதியிலேயே லிகிதா ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று (07.08.2024) திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமணம் முடிந்தவுடன், புதுமணத்தம்பதிகள் தனியாக ஒரு அறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் – வினோதம் நடந்தது எப்படி?

இந்த கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாற, இருவரும், ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, ரத்த காயத்தால் சுருண்டு விழுந்த இருவரையும், உறவினர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல, வழியிலேயே லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். நவீன் குமார் கோலார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இருவருக்கும் இடையில் என்ன தகராறு ஏற்பட்டதென்று தெரியவில்லை. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் செய்த அதே நாளில் கணவன் – மனைவி தக்கிக்கொண்டு, காதல் மனைவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Husband Wife
,
Karnataka
,
murder case
,
Wife Attacks Husband

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து