கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி!

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானாவின் மேடக் மாவட்டத்திலுள்ள சிவம்பேட் மண்டல் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு செல்வதற்காக காரில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், சிவம்பேட் மண்டல் பகுதியருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதுடன், அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில், காரில் இருந்த 3 சிறுமிகள் உள்பட மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரிலிருந்து இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்களும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, காயமடைந்தோருக்கு தேவைப்படும் சிகிச்சையளிக்க உரிய நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!