காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் குல்காம் மாவட்டம் மாடர்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த கிராமத்தில் போலீசாரும், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. தகவல் அறிந்து கூடுதல் படைகள் அங்கு வரவழைக்கப்பட்டன. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்