‘கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்’ – ஜெயக்குமார் ஆவேசம்

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்றது என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி இனவெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்