குரோஷியா ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

யூகி பாம்ப்ரி – அல்பானோ ஜோடி, மானுவல் கினார்டு – கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது

ஜாக்ரெப்,

குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி – பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு – கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.

முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோஷியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி