குளத்தில் சடலங்களாகக் கிடந்த காணாமல் போன சிறுமிகள்!

காணாமல் போன சிறுமிகளை தேடப்பட்டு வந்த நிலையில், குளத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா கிராமத்தில் 12, 16 வயதுடைய சிறுமிகள் இருவர் வைக்கோல் சேகரிக்க, சனிக்கிழமை பிற்பகலில் சென்றுள்ளனர். ஆனால், நள்ளிரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர், அப்பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.

இருப்பினும், சிறுமிகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

தாணே: யுபிஎஸ்சி போட்டித் தேர்வாளர் தற்கொலை

இந்த நிலையில், சிறுமி ஒருவரின் தாயார், ஞாயிற்றுக்கிழமை காலையில் குளத்திற்கு சென்றபோது, காணாமல் போன சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் குளத்தில் மிதப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமிகளின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிறுமிகளின் உடல்களில் எந்தவித காயமும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!