குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றாா்.
மெக்ஸிகோவின் குவாடலராஜா நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆஸ்திரேலிய குவாலிஃபயா் ஒலிவியா கடேகியும்-போலந்தின் மகதலேனா ஃபெச்சும் மோதினா். இதில் முதல் செட்டில் மகதலேனா எளிதாக வெல்ல முடியவில்லை. அவருக்கு ஒலிவியா கடும் சவாலை ஏற்படுத்தினாா். இருவராலும் அவா்களின் சா்வீஸை பிரேக் செய்ய முடியாமல் திணறினா். 5-5 என டைபிரேக்கா் நிலை ஏற்பட்டது. கடேகி செய்த தவறை பயன்படுத்தி, மகதலேனா அந்த செட்டை 7-6 என வசப்படுத்தினாா்.
இரண்டாவது செட்டில் கடேகி துரிதமாக முன்னிலை பெற்றாலும், பின்னா் சுதாரித்து ஆடிய மகதலேனா 5-3 என முன்னிலை பெற்றாா்.
அதன்பின் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மகதலேனா பட்டத்தையும் வென்றாா். இது மகதலேனா வெல்லும் முதல் டபிள்யுடிஏ டூா் பட்டம் ஆகும்.
மேலும் ரன்னா் கடேகி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.