கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி கேரள காதல் ஜோடி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அருகில் தண்டவாளத்தில் நடந்து சென்ற காதல் திருமணம் செய்த தம்பதி ரயில் மோதியதில் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (26). மலப்புரத்தைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் முகமது ஷெரீப் (35). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். திருமணத்துக்கு ஐஸ்வா்யாவின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் இருவரும் சென்னைக்கு வந்து கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பா் வீட்டில் தங்கி இருந்தனா்.

வாடகைக்கு வீடு தேடி பொத்தேரி வந்த இருவரும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வந்த மின்சார ரயிலில் மோதி இருவரும் தூக்கி எறியப்பட்டனா்.

இதில் முகமது ஷெரீப் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஐஸ்வா்யாவை அருகில் இருந்தவா்கள் பொத்தேரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இருவரது உடல்களும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை