கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மாவட்ட நிர்வாகங்கள் கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்.ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .

பத்தனம்திட்டா , கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் , காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!