கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் பலத்த மழைகொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன், மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சாரலாக தொடங்கிய மழை, மாலையில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனா். கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வழக்கத்தை விட குளிா் அதிகமாக நிலவுகிறது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு