கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக. 23 ஆம் தேதி வெளியானது.
ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படமான இது ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்தியைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினேன்… மெய்யழகன் குறித்து சூர்யா!
திரையிடலுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அங்கு பெரிய வரவேற்பும் கிடைத்தன.
இந்த நிலையில், ரஷியாவில் நடைபெற்ற அமுர் ஆடம் (amur autumn) சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற கொட்டுக்காளி திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது.
பெர்லின் சர்வதேச திரைவிழா வரை சென்ற கொட்டுக்காளி ரஷியாவிலும் விருதை வென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.