கொலைகார கும்பலிடம் இருந்து மகனை காத்த தாய்க்கு கத்தி குத்து

கொலைகார கும்பலிடம் இருந்து மகனை காத்த தாய்க்கு கத்தி குத்து – மகனே எமனாது எப்படி?

குற்றம்

கர்நாடக மாநிலத்தில் மகனை அடிக்க வந்த கும்பலிடம் தனது மகன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பிய தாயை, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மகன். மகனை காக்க முயன்ற தாய்க்கு மகனே எமனானது எப்படி?

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், தாசரஹள்ளி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 85 வயதான சாரதம்மா அகடி. கணவனை இழந்த இவர் தனது மகன் சித்தலிங்கப்பாவுடன் வசித்து வந்தார். 43 வயதான சித்தலிங்கப்பாவுக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளுக்கு மன்பு மனைவி இறந்து விட்டார்.

விளம்பரம்

இந்நிலையில் சித்தலிங்கப்பாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அப்பகுதி பெண்களுடனும் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் பக்கத்து வீட்டுக்காரரிடம் தகராறில் ஈடுபட அவர்கள் கும்பலாக சேர்ந்து சித்தலிங்கப்பாவை தாக்க முயன்றுள்ளனர்.

இதனைக் கண்டு பதறிப்போன அவரது தாயார் சாரதம்மா ஓடி வந்து, தன் மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், அதனால் தான் காண்போரிடம் எல்லாம் தகராறு செய்கிறான் என்றும் கூறியுள்ளார். உடனே கம்பு, உருட்டுக்கடைகளுடன் அடிக்க வந்தவர்கள் அவற்றை கீழே போட்டு விட்ட அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

ஆனால் தன்னை பெற்றெடுத்த தாய் தன்னை பைத்தியம் என்று கூறியது சித்தலிங்கப்பாவால் ஏற்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர், எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று எப்படி கூறுவாய்?” என கேட்டு, தாயிடம் தகராறு செய்துள்ளார். அன்று இரவு இருவரும் வீட்டில் படுத்திருந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சித்தலிங்கப்பாவிற்கு உறக்கம் வரவில்லை.

தன் தாய் சொன்னது மீண்டும் மீண்டும் மனக்கண் முன் வர படிப்படியாக ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. அளவு கடந்த கோபம் பொங்கி எழ உண்மையிலேயே பைத்தியம் பிடித்தது போல் எழுந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்துள்ளார். பின் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.

விளம்பரம்

மறுநாள் காலை தனது சகோதரிகளுக்கு போன் செய்த சித்தலிங்கப்பா, அம்மா இறந்து விட்டார் என்று கூறிவிட்டு செல்போனை துண்டித்தார். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சித்தலிங்கப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read:
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஷிவானி நாராயணன்?… வைரல் போட்டோஸ்

பெற்ற தாயே தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த மகன் ஆத்திரம் அடங்காமல் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!