கொல்கத்தா சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில், மேற்கு வங்க சுகாதாரத் துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை இன்று சமர்ப்பித்தது.

பாலியல் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கையில், பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து, மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இதுவரை 23 நோயாளிகள் பலியாகியிருக்கிறார்கள் என்று மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நிலையை அறிய சிபிஐ மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில், காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

சொல்லப் போனால்… ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்… சட்டம் யார் கையில்?

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மருத்துவர் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கொல்கத்தா காவல்துறையின்மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்திருந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்