கொல்கத்தா மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம்

கொல்கத்தா மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் தொடரும் போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பயிற்சி பெண் மருத்துவரின் கொடூரக் கொலையை கண்டித்து மேற்குவங்க சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து காவல் துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

மேலும் தெரிந்துகொள்ள:
மம்தா மீது குற்றம்சாட்டும் பெற்றோர்.. விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் – என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

இந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயுடன் தொடர்புடைய நபர் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரை செய்தியாளர்கள் படம்பிடிப்பதை அறிந்ததும் ஓட்டமாக ஓடி, சிபிஐ அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். கொடூரக் கொலையை கண்டித்து தனது மனைவியின் நடனப் பள்ளியில் இன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் கங்குலி அறிவித்துள்ளார்.

விளம்பரம்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata
,
Kolkata Doctor Murder Rape

Related posts

J&K’s Contrasting Realities: Terrorist Killed In Encounter As Anti-Israel Protests Erupt Amid Poll Campaigns

SEBI To Tighten The Noose On F&O After ₹1.8 Lakh Crore Loss In Futures & Options: All Investors Eyes Board Meeting Today

Amity University Student Group Mercilessly Thrashes Boy With Hockey Sticks & Fists In Noida; Video Goes Viral