கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல் அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல, ஜி.கே.எம். காலணியில் தொடக்கப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை தொடங்கி வைக்கிறார். மேலும், கொளத்தூர் நேர்மை நகரில் கட்டப்படும் வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.

கொளத்தூர் தணிகாசலம் கால்வாய் புணரமைப்பு பணிகளையும் முதல் அமைச்சர் பார்வையிடுகிறார். அப்போது முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்