கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து… நேர்த்திக்கடனுக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த வெள்ளாலங்குளத்தில் உள்ள பூலுடையார் சாஸ்தா அய்யனார் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தின்போது 4 சமையல் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் நேர்த்திக்கடனுக்காக கொண்டுவரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

கோவில் திருவிழாவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!