கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு!கோப்புப் படம்.

கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், கோவைக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக விமான நிலையம் மட்டுமின்றி, முக்கிய பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விடுக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்