சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக'' கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், சமூகநீதி நாள் உறுதிமொழியை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

உறுதிமொழியை முதல்-அமைச்சர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்