சற்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று கடும் சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

ஆனால் இன்று காலை பிஎஸ்இ சென்செக்ஸ் 168.79 புள்ளிகள் உயர்ந்து 80,389.51 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிப்டி 46.2 புள்ளிகள் உயர்ந்து 24,518.30 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13 சதவீதம் அதிகரித்து ரூ.4,014 கோடியாக அறிவித்ததை அடுத்து, அந்நிறுவன பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது.

பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி வங்கி, நெஸ்லே, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மாருதி ஆகிய நிறுவன பங்குகளும் லாபத்துடன் கைமாறின. என்டிபிசி, பவர் கிரிட், மஹிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.

ஆசிய சந்தைகளில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது, டோக்கியோ பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தன.

நேற்று பிஎஸ்இ சென்செக்ஸ் 930.55 புள்ளிகள் சரிந்து 80,220.72 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 309 புள்ளிகள் சரிந்து 24,472.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Gwalior Man Paraded For Molesting Minor Girl; Booked Under POCSO Act

Haryana Police Arrest 18 Farmers For Stubble Burning In Kaithal; Register Cases Against 22

Bajaj Finance Shares Surge Over 6% After Posting 13% Rise In Q2FY25 Net Profit