சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் செந்திமயில். இவர் வீட்டில் சார்ஜ் போட்டுக்கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் சரணிதா என்பவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் ஏற்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!